பலாலி விமான தளத்தை சர்வதேச அல்லது பிராந்திய விமானத் தளமாக மாற்ற வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைத்த அறிக்கை ஒன்றிலேயே முதலமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இந்திய அரசாங்கம் கூறியுள்ளபடி மேலதிக காணிகளை சுவீகரிக்காமல், பலாலி விமானத் தளத்தை சர்வதேச, பிராந்திய பாவனைக்காக திறக்க முடியுமென முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.