தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டங்கள்

வடக்கு மாகாணம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதினக் கூட்டங்கள் வடக்கு கிழக்கில் இன்று(01/05) இடம்பெறவுள்ளது.

கிளிநொச்சியில், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் “எமது உரிமையை வென்றெடுப்போம்” எனும் தொனிப்பொருளில், ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.

ஏழு அம்சக் கோரிக்கைகளாவன,

1.தமிழர் தாயகத்தை அங்கீகரிக்க கோரி
2.வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்தி
3.காணமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி
4.நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக 
5.அரசியல் கைதிகளின் விடுதலைக்காக
6.தொழிலாளர்களின் உரிமைக்காக
7.அதிகரித்த விலைவாசிக்காக

கிழக்கு மாகாணம்

தமித்தேசிய கூட்டமைப்பின் பாராளுன்ற உறுப்பினர் சாணக்கியன் தலைமையில், மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகாமையிலுள்ள மீனிசை சிறுவர் பூங்கா திடலில் பிற்பகல் 2 மணிக்கு மாபெரும் மேதினக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

Latest articles

Similar articles