மனோகணேசனின் கேள்விக்கு பதிலளிக்காத ஜனாதிபதி

பெரும்பாலான இலங்கை மக்களின் மனதில உள்ள கேள்வியை மனோகணேசன் ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார். ஆனால் ஜனாதிபதி பதிலளிக்காமல் அமைதியாக இருந்துள்ளார்.

பிரதமர் ரணிலுடனான முரண்பாடை ஏன் நீங்கள் எங்களுக்கு முதலே தெரிவிக்கவில்லை? தெரிவித்திருந்தால் நாம் உங்கள் இருவருக்குமிடையில் இருந்த முரண்பாட்டில் தலையிட்டிருப்போமே, என மனோகணேசன் ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார்.

ஆனால் ஜனாதிபதி பதிலெதுவும் சொல்லாமல் அடுத்த ஐந்து நிமிடத்தில் கூட்டத்தை நிறைவு செய்துள்ளார்.

ஜனாதிபதிக்கும், ஐக்கிய தேசிய முன்னணிக்குமிடையிலான பேச்சுவார்த்தையின்போதே இந்த நிகழ்வு நடந்துள்ளது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles