கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த மாணவன் மீது கோல் (goal) கம்பம் விழுந்ததில் காயமடைந்து, வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்வழியில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவர், கிளிநொச்சி மத்திய கல்லூரியில் உயர்தரப் (2020) பிரிவில் கல்வி பயிலும் மதியமுதன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஒரு துடுப்பாட்ட வீரருமாவார்.