இலங்கையின் பருத்தித்துறை கடற்பரப்பில் கஞ்சா கடத்திய மூவரை இலங்கை கடற்படையினர் கடந்த 9ம் திகதி கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து 118 Kg கேரளா கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 12 மில்லியன் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், மற்றும் மண்ணரைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்த
கடற்படையினர் , கைது செய்யப்பட்டவர்கள், கைப்பற்றிய கஞ்சா மற்றும் படகு என்பவற்றை காங்கேசன்துறை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.