கொக்குவில் பகுதியில் நேற்று முன்தினம் (26/04) இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை ஆவா குழுவின் ஒளிப்படத்தில் இருந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் மானிப்பாய் காவல்துறையினரால் ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி இளைஞர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பதால், இவர்கள்தான் உண்மையில் வாள்வெட்டில் ஈடுபட்டார்களா என்பது குறித்து எவ்வித தகவல்களும் தெரியவில்லை.
கடந்த ஞாயிற்றுகிழமை (22/04) சாவகச்சேரிப் பகுதியில் மூன்று வீடுகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.