மீண்டும் வாள்வெட்டு, எண்மர் கைது, காவல்துறையினரின் விடுமுறைகள் ரத்து

கொக்­கு­வி­ல் பகுதியில் நேற்று முன்­தி­னம் (26/04) இடம்­பெற்ற வாள்­வெட்­டுச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் என்ற சந்தேகத்தின் அடிப்­ப­டை­யில் இரு­வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஆவா குழுவின் ஒளிப்படத்தில் இருந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் மானிப்பாய் காவல்துறையினரால் ஆறுபேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

மேற்படி இளைஞர்கள் சந்தேகத்தின் அடிப்­ப­டை­யில் கைது செய்யப்பட்டிருப்பதால், இவர்கள்தான் உண்மையில் வாள்வெட்டில் ஈடுபட்டார்களா என்பது குறித்து எவ்வித தகவல்களும் தெரியவில்லை.

கடந்த ஞாயிற்றுகிழமை (22/04) சாவகச்சேரிப் பகுதியில் மூன்று வீடுகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாள்வெட்டு சம்பவங்களையடுத்து, யாழ் பிராந்திய காவல்நிலையங்களில் கடமையாற்றும் காவல்துறையினரின் விடுமுறைகள் யாவும் மறுஅறிவித்தல்வரை இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Latest articles

Similar articles