மீண்டும் வாள்வெட்டு, எண்மர் கைது, காவல்துறையினரின் விடுமுறைகள் ரத்து

கொக்­கு­வி­ல் பகுதியில் நேற்று முன்­தி­னம் (26/04) இடம்­பெற்ற வாள்­வெட்­டுச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் என்ற சந்தேகத்தின் அடிப்­ப­டை­யில் இரு­வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஆவா குழுவின் ஒளிப்படத்தில் இருந்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் மானிப்பாய் காவல்துறையினரால் ஆறுபேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

மேற்படி இளைஞர்கள் சந்தேகத்தின் அடிப்­ப­டை­யில் கைது செய்யப்பட்டிருப்பதால், இவர்கள்தான் உண்மையில் வாள்வெட்டில் ஈடுபட்டார்களா என்பது குறித்து எவ்வித தகவல்களும் தெரியவில்லை.

கடந்த ஞாயிற்றுகிழமை (22/04) சாவகச்சேரிப் பகுதியில் மூன்று வீடுகளில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாள்வெட்டு சம்பவங்களையடுத்து, யாழ் பிராந்திய காவல்நிலையங்களில் கடமையாற்றும் காவல்துறையினரின் விடுமுறைகள் யாவும் மறுஅறிவித்தல்வரை இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles