கடந்த 2017ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், மாகாணரீதியாக வட மாகாணம் தொடர்ந்தும் கடைசி இடத்திலேயே அதாவது ஒன்பதாவது இடத்திலேயே உள்ளது. கிழக்கு மாகாணம் எட்டாவது இடத்தில் உள்ளது.
தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கல்வித் தரத்தில் கடைசி இரு இடங்களில் இருப்பது மிகவும் வேதனை தரும் ஒரு விடயமாகும்.
அகில இலங்கைரீதியில் வட மாகாண மாவட்டங்களின் நிலை பின்வருமாறு,
- மன்னார் – 12ம் இடம்
- வவுனியா – 18ம் இடம்
- யாழ்ப்பாணம் – 19ம் இடம்
- முல்லைத்தீவு – 24ம் இடம்
- கிளிநொச்சி – 25ம் இடம்
யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் ஆகப்போகிறது. மாகாணசபைகளின் கையில் ஆட்சி உள்ளது. இருப்பினும் கல்வியில் முன்னேற்றம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. வட மாகாண கல்வி அமைச்சர் உரிய நடவடிக்கைகள் எடுப்பாரா?