க.பொ.த (சா/த) பெறுபேறு, வடமாகாணம் கடைசி

கடந்த 2017ம் ஆண்டு கல்­விப் பொதுத்­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்­சைப் பெறு­பே­று­க­ளின் அடிப்­ப­டை­யில், மாகாணரீதியாக வட மாகா­ணம் தொடர்ந்­தும் கடைசி இடத்­தி­லேயே அதாவது ஒன்பதாவது இடத்­தி­லேயே உள்­ளது. கிழக்கு மாகா­ணம் எட்டாவது இடத்­தில் உள்­ளது.

தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கல்வித் தரத்தில் கடைசி இரு இடங்களில் இருப்பது மிகவும் வேதனை தரும் ஒரு விடயமாகும்.

அகில இலங்கைரீதியில் வட மாகாண மாவட்டங்களின் நிலை பின்வருமாறு,

  • மன்­னார் – 12ம் இடம்
  • வவுனியா – 18ம் இடம்
  • யாழ்ப்பாணம் – 19ம் இடம்
  • முல்லைத்தீவு – 24ம் இடம்
  • கிளிநொச்சி – 25ம் இடம்
யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் ஆகப்போகிறது. மாகாணசபைகளின் கையில் ஆட்சி உள்ளது. இருப்பினும் கல்வியில் முன்னேற்றம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. வட மாகாண கல்வி அமைச்சர் உரிய நடவடிக்கைகள் எடுப்பாரா?

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles