டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமான் அமைச்சர்களாக பதவியேற்பு

ஈபிடிபி அமைப்பின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் ஆகியோர் கோத்தபாய ராஜபக்சவின் இடைக்கால அரசில் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

கடற்தொழில்  மற்றும் நீரியல்வள அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவும், தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக ஆறுமுகம் தொண்டமானும் பதவியேற்றுள்ளனர்.

ராஜாங்க அமைச்சர்களின் நியமணத்தின்போது மேலும் சில தமிழர்களுக்கு பதவிகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest articles

Similar articles