சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னம் அவசியம் – கனடா உறுதி

சர்வதேச விசாரணையாளர்கள் மற்றும் நீதிபதிகளின் பிரசன்னத்தை உறுதிப்படுத்துவதன் மூலம், இலங்கை அதன் பொறுப்புக்கூறும் தன்மையை சர்வதேசத்திற்கு உறுதிப்படுத்தவேண்டும் என கனடா காட்டமாக தெரிவித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் (UNHRC) 37 வது கூட்டத் தொடரிலேயே கனடா இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

“இலங்கையின் 26 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தின் முடிவு முக்கியமானதாக இருப்பினும், அது ஒரு முதல் படியாக மட்டுமே இருந்தது. போரின் வடுக்களால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் விரக்தியிலேயே இருக்கின்றனர். அவர்களுக்கு உண்மையான தீர்வு கிடைக்கவேண்டுமென விரும்புகிறோம்” என கனடா தெரிவித்துள்ளது.

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles