கடந்த இரு மாதங்களில் ஆவா குழுவைச் சேர்ந்த 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
நேற்று (23/08) பாராளுமன்றத்தில், டக்ளஸ் தேவானந்தாவினால் தெரிவிக்கப்பட்ட கருத்திற்கே சட்ட அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
ஆவா குழுவினால் யாழ் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுவதாக தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, ஆவா குழுவின் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.