இரு மாதங்களில் 38 ஆவா குழு உறுப்பினர்கள் கைது – சட்ட அமைச்சர்

கடந்த இரு மாதங்களில் ஆவா குழுவைச் சேர்ந்த 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

நேற்று (23/08) பாராளுமன்றத்தில், டக்ளஸ் தேவானந்தாவினால் தெரிவிக்கப்பட்ட கருத்திற்கே சட்ட அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

ஆவா குழுவினால் யாழ் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுவதாக தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, ஆவா குழுவின் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles