இலங்கையில் அண்மையில் நடந்த கலவரங்கள் தொடர்பாக இதுவரை 230 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகரா தெரிவித்துள்ளார்.
இதில் 161பேர் கண்டி மாவட்டத்திலும், 69பேர் ஏனைய மாவட்டங்களிலும் கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.