வவுணதீவில் துப்பாக்கிச் சூடு, இரு காவல்துறையினர் உயிரிழப்பு

நேற்று (29/11) மட்டக்களப்பு வவுணதீவில், வீதிச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த காவல்துறையினர் இருவரும் வவுணதீவு காவல் நிலையத்தில் கடமையாற்றுபவர்கள் என தெரியவருகிறது.

துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட நபர்கள் பற்றி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Latest articles

Similar articles