ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம் தொடர்பாக கருத்து வெளியிட்டமை தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த விஜயகலா மகேஸ்வரன். வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
5 லட்சம் ரூபா சரீரப்பிணையில் அவரை விடுவிக்கப்பட்டுள்ள பாராளமன்ற உறுப்பினர், வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.