ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் அரசு வேடிக்கை பார்க்கிறது – ரஜினிகாந்த்

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையில் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்பட பலவித நோய்கள் ஏற்படுவதாக கூறி அந்த ஆலையை மூடும்படி அப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில், அடுத்த ஆண்டுடன் ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்தம் முடிவடையவுள்ள நிலையில் மத்திய அரசு அந்த ஒப்பந்தத்தை நீடித்துள்ளது மட்டுமின்றி இன்னொரு ஆலை ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளது.

இந்த பிரச்சனை குறித்து மத்திய மாநில அரசுகள் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் உள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இது தொடர்பாக ட்விட்டர் தளத்தில் தனது விசனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles