வடபகுதியில் வரும் சனி (26) மற்றும் ஞாயிறு (27) தினங்கள் பகல் நேரத்தில் மின்தடை

வடக்கு மாகாணம் முழுவதும் எதிர்வரும் சனிக்கிழமை (26) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (27) ஆகிய இரு தினங்களும் காலை 8 முதல் 5 மணிவரை மின்சாரம் தடைப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

வட பகுதிக்கான பிரதான மின் மார்க்கங்களான அநுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளின் அதியுயர் மின்னழுத்த மின்மாற்றிகளின் பராமரிப்பு வேலைகளுக்காகவே மின்சாரம் நிறுத்தப்படவுள்ளது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles