இலங்கையிலேயே அதிக வருமானத்தை ஈட்டிக்கொடுக்கும் யாழ் புகையிரத சேவையில் பாரபட்சம் காட்டப்படுவதாக கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் குற்றம் சாட்டியுள்ளார்.
தூர இடங்களுக்கான புகையிரத சேவையில் உறங்கல் இருக்கைகள் கொண்ட புகையிரதப் பெட்டிகள் இருப்பது வழமை. இருப்பினும் யாழ் புகையிரத சேவையில் உறங்கல் இருக்கைகள் கொண்ட புகையிரதப் பெட்டிகள் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் போக்குவரத்து அமைச்சரிடம் கேட்கப்பட்டு எட்டு மாதங்களாகியும், எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.