யாழில் சமுர்த்தி கொடுப்பனவுகள்

யாழ் மாவட்டத்தில் உள்ள 78,442 சமுர்த்தி பயணாளிகளுக்கான கொடுப்பனவு, அவர்களது வங்கிக் கணக்கில் வைப்பிலிட ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ் அரச அதிபர் திரு மகேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் 1-2 நபர்களைக் கொண்ட குடும்பத்திற்கு 5,000 ரூபாயும்,
3 நபர்களைக் கொண்ட குடும்பத்திற்கு 6,400 ரூபாயும்,
நான்கு மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களைக் கொண்ட குடும்பத்திற்கு 7,500 ரூபாவும் கொடுப்பனவாக வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest articles

Similar articles