மாதகலில் இளம்பெண் கொள்ளையர்களால் படுகொலை

யாழ்ப்பாணம் மாதகல் பிரதேசத்தில் 22 வயதுடைய பெண் ஒருவர் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

உறவினர்கள் தேவாலயம் சென்றிருந்தவேளையில், வீட்டில் தனிமையில் இருந்த அன்றன் டிலக்ஸி என்ற பெண்ணே ​கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று (31/01) காலை வீட்டில் யாருமில்லை என நினைத்து கொள்ளையிட வந்த திருடர்கள் வீட்டைக் கொள்ளையிட்டதுடன், டிலக்ஸியையும் கொலை செய்துள்ளனர்.

காலை நேரத்திலேயே திருடர்கள் தமது கைவரிசையை காட்டுமளவிற்கு யாழ்ப்பாணத்தின் சமூக பாதுகாப்பு நிலைமை மிக மோசமடைந்துள்ளது.

Latest articles

Similar articles