பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும், தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்படும் என்று தமிழக அமைச்சரவைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ‘’சட்டப்பிரிவு 161ன் கீழ் 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் இந்த தீர்மானத்தை ஆளுநருக்கு இன்றே (09/09) அனுப்பி வைக்கப்படும் என்றும், பரிந்துரையை ஏற்று ஆளுநர் உடனடி நடவடிக்கை எடுப்பார்’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Latest articles

Similar articles