முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை காட்டுப்பகுதியில் தலையில் சுடப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
முள்ளியவளை முதலாம் வட்டாரத்தினைச் சேர்ந்த மனோகரன் கஜிந்தன் (22) எனும் இளைஞரே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சூட்டுச் சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.