முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச வீடியோக்களை கைப்பேசிகளில் பதிவேற்றிக் கொடுத்த கும்பலை இலங்கை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைத்தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினியில் ஆயிரக்கணக்கான தமிழ், சிங்கள ஆபாச படங்கள் இருந்துள்ளன.
இக்கும்பலானது மாணவர்ககளின் கைப்பேசிகளுக்கு ஆபாச படங்களை பரிமாற்ற நூறு ருபாய் வீதம் அறவிட்டுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழர் பிரதேசங்களில் இவ்வாறான தரங்கெட்ட செயல்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பது தொடர்பில் மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது மிகவும் அவசியம்.