யாழ். மாவட்டச் செயலகத்தில் வர்த்தக சமூகத்தினர், கூட்டுறவுத் துறையினர், வங்கித் துறையினர் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடிய நிதி அமைச்சர் மங்கள சமரவீர, முன்னாள் போராளிகளுக்கு தொழில் வாய்ப்பை வழங்குமாறு கூட்டுறவுத்துறையினர் மற்றும் வர்த்தகர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அவ்வாறு முன்னாள் போராளிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும்பட்சத்தில், அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் 50 வீதத்தை நிதி அமைச்சு தொழில் வழங்குனருக்கு திருப்பித்தரும் என அமைச்சர் உத்தரவாதம் வழங்கினார்.
ஒருகாலத்தில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடிய போராளிகளை, வடக்கில் மக்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் என எவருமே கணக்கில் எடுப்பதாக தெரியவில்லை. பெரும்பாலான முன்னாள் போராளிகள் பிச்சை எடுக்கும் நிலையிலுள்ளனர்.
நிதி அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று, வர்த்தக சமூகத்தினர் முன்னாள் போராளிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கி, அவர்களின் வாழ்வாதாரம் சிறக்க வழிவகை செய்யவேண்டும்.