யாழ் ஊர்காவற்துறையில் உணவு ஒவ்வாமையால் 100இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மெலிஞ்சிமுனை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற வைபவத்தின்போது வழங்கப்பட்ட உணவை உண்டவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.
சம்பவம் தொடர்பாக காவல்துறையினரும், சுகாதார பரிசோதகர்களும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.