யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கிடையே மோதல், மூவர் காயம்

நேற்று (11/01) பிற்பகல் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் மூன்று மாணவர்கள் காயமடைந்தனர்.

மோதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. காயமடைந்த மாணவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ் பல்கலைக்கழக கலைப்பீட 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கு மறு அறிவித்தல்வரை வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலைப்பீடாதிபதி சுதாகர் தெரிவித்துள்ளார்.

 

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles