யாழில் புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் நெளுக்குளம் புகையிரதக் கடவையில் நேற்று (28/07) கொழும்பிலிருந்து யாழ் நோக்கிப் பயணித்த புகையிரதத்துடன், மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

புகையிரதக் கடவையில் சமிஞ்ஞை விளக்கு ஒளிர்ந்த வண்ணம் இருந்துள்ளது. இருப்பினும் மோட்டார் சைக்கிள் அதிவேகமாக வந்ததால், வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் புகையிரதத்துடன் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஒரு மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்திருந்ததுடன், தலைக்கவசமும் அணிந்திருக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles