யாழ் நகரில் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்ட சோதனைகளையடுத்து 18 கடைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது எட்டுக் கடைகளுக்கு சீல் வைக்குமாறு உத்தரவிடப்படத்தையடுத்து, அக்கடைகள் சீல் வைத்து மூடப்பட்டன.
யாழ் நகரிலுள்ள உணவகங்கள், மருந்தகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்ட சோதனைகளில், சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகங்கள் மற்றும் சில வர்த்தக நிலையங்கள், காலாவதியான மருந்துகளை வைத்திருந்த இரு மருந்தகங்கள் என்பவற்றிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.