நல்லாட்சி அரசாங்கத்தில் படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த 3081 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ் அரச அதிபர் திரு.வேதநாயகன் தெரிவித்துள்ளார். இருப்பினும் இன்னும் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள 5000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவேண்டியுள்ளது என யாழ் அரச அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை உயர் பாதுகாப்பு வலயயமான மயிலிட்டி துறைமுகத்தை அண்டிய பகுதியிலுள்ள 3KM தூரமுடைய பொன்னாலை – பருத்தித்துறை வீதி , சுதந்திர தின நாள் முதல் மக்கள் பாவனைக்கு திறக்கப்படவுள்ளது.