12ம் திகதி முதல் யாழ்-சென்னை விமான சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்குமிடையிலான நேரடி விமான சேவை வரும் 12ம் திகதி முதல் (12/12) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அலியான்ஸ் எயார் (Alliance Air) நிறுவனம் வாரத்திற்கு நான்கு நாட்கள் யாழ்-சென்னை விமான சேவையை மேற்கொள்ளவுள்ளது. ஒரு வழிக்கட்டணமாக அண்ணளவாக ரூபாய் 42,000 (9,200 இந்திய ரூபாய்கள்) அறவிடப்படுகிறது.

90 நிமிட விமான பயணத்திற்காக ATR-72 வகை விமானத்தை அலியான்ஸ் எயார் பயன்படுத்தவுள்ளது.

2019ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட யாழ்-சென்னை விமான சேவை, கொரோனா தொற்று காரணமாக 2020 மார்ச் மாதம் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest articles

Similar articles