யாழ் மாணவர்கள் இருவர் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. யாழ் மாணவர்கள் இருவர் 198 புள்ளிகளுடன் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையின் மாணவரான திகலொளிபவன் மற்றும் சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலைச் சேர்ந்த நதி ஆகிய மாணவர்களே 198 புள்ளிகள் பெற்று, தமிழ் மொழி மூல பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் தேசியமட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளனர்.

இதேவேளை வவுனியா சிவபுரம் ஆரம்ப பாடசாலை மாணவி ஒருவர் 197 புள்ளிகள் பெற்று தேசியமட்டத்தில் மூன்றாம் இடத்திலுள்ளார்.

சிங்கள மொழி மூலம் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் இருவர் 199 புள்ளிகளை பெற்று தேசியமட்டத்தில் முதலிடத்திலுள்ளனர்.

பரீட்சைப் பெறுபேறுகளைப் பார்வையிட இங்கே அழுத்தவும் : www.doenets.lk

Latest articles

Similar articles