நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு காலை ஏழு மணிக்கு சுமூகமாகத் தொடங்கியயுள்ளது. வாக்காளர்கள் மாலை ஐந்து மணிவரை தமது வாக்குகளைப் பதிவு செய்துகொள்ளலாம்.
மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
தமிழ்க் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஆனோல்ட் மற்றும் சுமந்திரன், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் அனந்தி சசிதரன் ஆகியோர் தமது வாக்குகளை காலையிலேயே பதிவு செய்துள்ளனர்.