தமிழீழ விடுதலை இயக்கத்திலிருந்து (TELO) விலகுவதாக கணேஸ்வரன் வேலாயுதம் அறிவித்துள்ளார்.
தனது பதவி விலகல் கடிதத்தை கட்சியின் செயலாளர் ந.ஸ்ரீகாந்தாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ள கணேஸ்வரன், கடந்த 30 வருட போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கட்சியுடன் இணைந்து தன்னால் பூரண உதவிகளை செய்ய முடியவில்லை என்று தெரிவித்தார்.