சித்தார்த்தனின் நம்பிக்கை

இனப்பிரச்சனைக்கு நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்பட்டால், புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்வார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தேசிய கொள்கை வகுக்கும்போது, வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் பங்களிப்பையோ, ஆலோசனைகளையோ அரசு பெறுவதில்லை. தெற்கில் உள்ள கட்சிகளே எல்லாவற்றையும் மேற்கொள்கின்றன என தெரிவித்த சித்தார்த்தன், பொருளாதார பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமாயின், நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்த வகையில் தேசிய கொள்க வகுக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

Latest articles

Similar articles