மகளை வல்லுறவுக்குட்படுத்திய தந்தைக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறை

கடந்த 2012 ஆண்டு யாழ்ப்பாணம் தெல்லிப்பழைப் பகுதியில் சொந்த மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய தந்தைக்கு, 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும் 45 ஆயிரம் ரூபா நஷ்டஈடும் விதித்து யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

சட்டமா அதிபரால் யாழ். மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (08/01) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றவாளியான தந்தை தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து இத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

Latest articles

Similar articles