யாழ் சுழிபுரம் பகுதியில் ஆறு வயது சிறுமி ஒருவர் படுகொலை செய்யப்பட்டு, கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பதற்ற நிலையை தோற்றுவித்துள்ளது.
சிவனேஸ்வரன் ரெஜினா என்ற சிறுமியே கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். பாடசாலைவிட்டு வீடு வரும் வழியிலேயே இந்த கோர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொலை தொடர்பாக நால்வரை இலங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.