இலங்கையின் புகழ் பெற்ற ‘பொப்’ பாடகர்களில் ஒருவரான A.E.மனோகரன் சென்னையில் காலமானார்.
யாழ்ப்பாணத்தில் பிறந்த A.E.மனோகரன், “சுராங்கனி, சுராங்கனி, சுராங்கனிக்கு மாலு கெனாவா” என்ற ஒரு பாடலின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார்.
இவர், நடிகர் சிம்புவின் “தொட்டி ஜெயா” படத்திலும், ‘அத்திப் பூக்கள்’ , ‘அஞ்சலி’ , ‘திருமதி செல்வம்’ போன்ற பிரபல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.