மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 10 இலங்கையர்கள் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர். இதில் மூன்று மாதக் குழந்தை ஒன்றும் உள்ளடங்கும்.
யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த 10 பேர் நேற்று (05/11) தனுஷ்கோடி பகுதியில் கரைசேந்துள்ளனர். கரையோர காவல்துறையினரின் விசாரணைகளின் பின்னர், இவர்கள் மண்டபம் அகதி முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்த ஆண்டில் இதுவரையில் 198 இலங்கையர்கள் தமிழ்நாட்டிற்கு அகதிகளாகச் சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.