ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடலில் படகு சவாரி ஆரம்பம்

யாழ்ப்பாணம் ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடலில் பொழுதுபோக்கு படகு சவாரி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த படகு சவாரியில், சிறிய படகு ஒன்று பயன்பாட்டில் விடப்பட்டுள்ளது.

எட்டு இருக்கைகளைக்கொண்ட இயந்திரப் படகு மக்களுக்கான பொழுதுபோக்கு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. இந்த படகின் மேற்பகுதி, இயற்கையான முறையில் பனை ஓலைகளினால் கூரை போன்று அமைக்கப்பட்டுள்ளது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles