நேற்று (29/11) மட்டக்களப்பு வவுணதீவில், வீதிச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த காவல்துறையினர் இருவரும் வவுணதீவு காவல் நிலையத்தில் கடமையாற்றுபவர்கள் என தெரியவருகிறது.
துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட நபர்கள் பற்றி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.