மாதகலில் இளம்பெண் கொள்ளையர்களால் படுகொலை

யாழ்ப்பாணம் மாதகல் பிரதேசத்தில் 22 வயதுடைய பெண் ஒருவர் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

உறவினர்கள் தேவாலயம் சென்றிருந்தவேளையில், வீட்டில் தனிமையில் இருந்த அன்றன் டிலக்ஸி என்ற பெண்ணே ​கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று (31/01) காலை வீட்டில் யாருமில்லை என நினைத்து கொள்ளையிட வந்த திருடர்கள் வீட்டைக் கொள்ளையிட்டதுடன், டிலக்ஸியையும் கொலை செய்துள்ளனர்.

காலை நேரத்திலேயே திருடர்கள் தமது கைவரிசையை காட்டுமளவிற்கு யாழ்ப்பாணத்தின் சமூக பாதுகாப்பு நிலைமை மிக மோசமடைந்துள்ளது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles