மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை 30 வருடங்களின் பின்னர் விடுவிப்பு

கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை உத்தியோகபூர்வமாக விடுவிப்பு.

விடுவிக்கப்பட்ட வைத்தியாயசாலையை உடனடியாக இயக்க முடியாத நிலை காணப்படுகிறது. ஏனெனில் இராணுவத்தினர் வைத்தியசாலையை உல்லாச விடுதியாக பயன்படுத்தியதால், வைத்தியசாலைக்குரிய அமைப்புக்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருந்த மயிலிட்டி காசநோய் வைத்தியசாலை வட இலங்கையின் ஒரே ஒரு காசநோய் வைத்தியசாலை என்பது குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles