போர் முடிவடைந்த பின்னர் வட மாகாணத்தில் 131 விகாரைகள்

பௌத்தர்கள் அதிகமாக வாழாத வடக்கு மாகாணப் பகுதிகளில் திட்டமிட்டு பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருவதாக வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளினுடனான போர் முடிந்த பின்னர், வடமாகாணத்தில் மட்டும் 131 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் 67 விகாரைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார்.

இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் 67 விகாரைகளும், வவுனியா மாவட்டத்தில் 35 விகாரைகளும், மன்னார் மாவட்டத்தில் 20 விகாரைகளும், யாழ் மாவட்டத்தில் 6 விகாரைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 விகாரைகளும் அமைக்கப்பட்டிருப்பதாகவும் து.ரவிகரன் மேலும் தெரிவித்தார்.

Latest articles

Similar articles