இந்த ஆண்டி ல் இதுவரை 2 மெற்றிக் தொன் போதைப்பொருள் மீட்பு

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை சுமார் இரண்டு மெற்றிக் தொன் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

39,671 சுற்றிவளைப்புகள் மற்றும் தேடுதல்களில் சுமார் 39,428 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 1,290 பாடசாலை மாணவர்கள் மற்றும் 6,345 பெண்களும் உள்ளடங்குவர்.

இலங்கையில் பல அரசியல்வாதிகள் போதைப் பொருள் வர்த்தகத்தில் மறைமுகமாக ஈடுபட்டுள்ளனர். இலங்கையின் பல பகுதிகளில் போதைப்பொருள் வர்த்தக முரண்பாடுகள் காரணமாக, கடந்த சில மாதங்களில் பல தொடர் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பட்டப்பகலிலேயே இடம்பெற்றிருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Puthinam NEWS WhatsApp Channel

Latest articles

Similar articles