நாடு கடத்தப்படவிருந்தவர்கள் இறுதி நிமிடத்தில் விமானத்திலிருந்து இறக்கப்பட்டனர்

பிந்திய இணைப்பு  இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்த தமிழ் குடும்பம் இறுதி நிமிடத்தில் விமானத்திலிருந்து  குடிவரவு அதிகாரிகளால் இறக்கப்பட்டுள்ளனர். நடேசலிங்கம், பிரியா மற்றும் அவர்களது இரு குழந்தைகளே இவ்வாறு இறுதி நிமிடத்தில் நாடு கடத்தப்படும் அபாய கட்டத்தை தற்காலிகமாக கடந்துள்ளனர். குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ஒரு சிறிய ஊரான பிலேவிலாவில் (Biloela) வசித்துவந்த நடேசலிங்கம் குடும்பத்தை நாடு கடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்று திரண்ட அந்த ஊர் மக்கள், உள்விவகார அமைச்சருக்கு நாடு கடத்தலை தடுக்கக்கோரி 76,000 கையெழுத்துக்களை திரட்டியிருந்தனர். … Continue reading நாடு கடத்தப்படவிருந்தவர்கள் இறுதி நிமிடத்தில் விமானத்திலிருந்து இறக்கப்பட்டனர்