யாழில் டெங்கு காய்ச்சலினால் 11 வயது மாணவன் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் பாண்டியன்தாழ்வுப் பகுதியில் டெங்கு காய்ச்சல் தொற்றினால் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பதினொரு வயதான பாடசாலை மாணவனுக்கு முதலில் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மறுநாள் காய்ச்சலுடன் வயிற்றோட்டமும் ஏற்பட்ட நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் மாணவனுக்கு, சிகிச்சை பலனளிக்காமையினால் அவர் உயிரிழந்துள்ளார். டெங்கு காய்ச்சல் நுளம்பின் மூலமாக பரவும் ஒரு வைரஸ் நோயாகும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed